வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள காற்றழுத்தம்

28

வங்காள விரிகுடா பிரதேசத்தில் எதிர்வரும் (01.12.2023) ஆம் திகதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் நவம்பர் 29இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.எதிர்வரும் (29.11.2023) ஆம் திகதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join Our WhatsApp Group