மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் 33 வருடங்களின் பின்னர் கைது

28

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் 33 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பமுனுகம, பண்டாரகம பிரதேச வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண், கொலை செய்யப்பட்ட பொறியியலாளர் பணியாற்றிய அலுவலகத்தில் ஆங்கில மொழி தட்டெழுத்தாளராக கடமையாற்றியவராவார்.

1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வீடு ஒன்றுக்கு பொறியியலாளரை அழைத்துச் சென்று கொலை செய்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது.

Join Our WhatsApp Group