கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள் போராட்டம் 

62

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று வெள்ளிக்கிழமை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. 

அத்தோடு, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் இன்று வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது, போராட்டக்காரர்கள் சம்பள பற்றாக்குறை, வரிச் சுமை, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர்.

Join Our WhatsApp Group