இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் நேற்று (16) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விசேட கலந்துரையாடலொன்றிற்காக வந்திருந்தனர்.
இக்கலந்துரையாடலில் தேசிய அணி வீரர்கள், இலங்கை கிரிக்கெட் செயற்குழு அதிகாரிகள், தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்த வீரர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.